2025 மே 19, திங்கட்கிழமை

ரவிராஜ் கொலை விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவு

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி, நடராஜா ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பில், கடற்படை வீரர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார்  கைப்பற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X