Freelancer / 2022 ஜூன் 27 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார்.
2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025