2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு எம்.பியின் வாகனம் மோதியதில் இருவர் காயம்

Editorial   / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம்  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் வேனின் சாரதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கு சியாமளா சந்தி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வேனில் பயணித்தபோது சனிக்கிழமை (31) அன்று விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X