Simrith / 2024 நவம்பர் 20 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பது பிரச்சினை இல்லை என்றாலும், தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்பு சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தினார்.
“30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை போராடியது, இன்று அனைத்து சமூகங்களும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கின்றன” என ராஜபக்ச குறிப்பிட்டார்.
வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும், புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், தேசிய பாதுகாப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago