Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 12 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு, ஏற்கெனவே அமுலில் உள்ளது. அதன்பிரகாரம், நேற்று 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் இம்மாதம் 30ஆம் திகதிவரை அக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
இந்நிலையில்,
இன்று (12) இரவு 11 மணிமுதல் நாளை (13) அதிகாலை 4 மணிவரையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (அது அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது)
13ஆம் திகதி இரவு 11மணிமுதல் 16ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை மூன்று நாள்களுக்கு நாடளாவிய ரீதியில், பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள செல்வோருக்கும் அந்த தடை பொருந்தாது.)
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், அதன் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறலாம்.
அவற்றின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒன்றை எண்களைக் கொண்ட நாள்களில் வீட்டை விட்டு வெளியேறலாம்.
0,2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட நாள்களில் வீடுகளிலிருந்து வெளியேறலாம்.
இது, பயணங்கள் முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கும் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளுக்கு முழுமையாக பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago