2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வவுணதீவில் கான்ஸ்டபிள்கள் கொலை; சீஐடி விசாரணை ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன் பிர​காரம், குறித்த படுகொலை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ​குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் குழுவொன்று, குறித்த பிரதேசத்துக்குப் பயணித்துக்கதென்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (30) காலை 6 மணியளவில், மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதுவரதும் சடலங்கள், குறித்த பககுதி பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டன. இருப்பினும், இவர்களது மரணத்துக்கான காரணம் தொடர்பில், இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இவ்விரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரும், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்றும் அவர்களில் ஒருவர், காலி - உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நிரோஷன் இந்திக்க பிரசன்ன என்றும் மற்றையவர், கல்முனை - பெரியநீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ் தினேஸ் என்பவரென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .