2025 ஜூன் 18, புதன்கிழமை

விசாரணைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை

J.A. George   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களின் விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.

இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வார்களின் அறிக்கை தாமதமடைகின்றமையே, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதென அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் நிறுவன மட்டத்தில் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .