2025 ஜூன் 25, புதன்கிழமை

விசாரணை அறிக்கையை வழங்குமாறு CIDக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்த அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரால், கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .