Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருக்கோணமலை - கண்டி பிரதான வீதி பாலம் போட்டாறு பகுதியில், இன்று (29) இடம்பெற்ற விபத்தில், 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன், திருகோணமலை - முத்துநகர் பாலம், போட்டாறு பகுதியைச் சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என பொலிஸார் தெரிவித்தார்.
அண்ணனுடன் தம்பி பிரத்தியேக வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த டிமோ பட்டா சிறிய ரக லொறி மோதியதாலேயே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago