Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு (12) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி-காசீம் நகர் பகுதியைச் சேர்ந்த றினோஸ் நிஸ்ரி ஷெரீப் (07 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.
தாத்தாவுடன் மோட்டார் சைக்கிளில் குறித்த சிறுவனும் அவரது தங்கையும் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், நேராக வந்த உழவு இயந்திரத்துடன் மோதுண்டதில், உழவு இயந்திரத்தின் சில்லில் சிறுவன் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தையடுத்து, உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago