2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘விலை அதிகரிப்பின்றேல் பால்மா இறக்குமதி தடைபடும்’

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படாது விட்டால், பால்மா இறக்குமதியை இடைநிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லையென பிரதான பால்மா  இறக்குமதியாளர் நிறுவனங்கள் தெரிவித்துன.

பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தற்போது மாதாந்தம் 30 மில்லியன் ரூபாய் தொடக்கம் 40 மில்லியன் ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பால்மா பெக்கற் ஒன்றின் விலையை 100 ரூபாயால் அதிகரிக்க அனுமதி வழங்கும் வரை துறைமுகத்திலுள்ள பால்மா தொகையினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .