2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வீட்டில் உறங்கிய குழந்தையை கவ்விச் சென்று குதறிய நாய்

Editorial   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது.

இந்த சம்பவம், திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அபு​தாகிர். வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி சுல்​தான்​பீ​வி(26). இவர்​களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்​றரை வயது ஆண் குழந்தை உள்​ளது.

சுல்​தான் பீவி, தனது தாய் மல்​லிகா பீவி(44) மற்​றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேல​கொண்​டாழி கிராமத்​தில் உள்ள வீட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், புதன்கிழமை (20)  காலை சுல்​தான் பீவி, வீட்​டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்​கத்​தில் படுக்​க​வைத்​துக்​கொண்​டு, தூங்​கிக் கொண்​டிருந்​தார்.

மல்​லிகா பீவி வீட்​டின் பின்​புறம் பாத்​திரம் கழு​விக்​கொண்​டிருந்​தார். திடீரென வீட்​டுக்​குள் புகுந்த ஒரு தெரு நாய், தாயின் அரு​கில் தூங்​கிக் கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்விக்​கொண்டு ஓடியது. குழந்​தை​யின் அலறல் சப்​தம் கேட்டு ஓடிவந்த மல்​லிகா பீவி, நாயை துரத்​திச் சென்​றார். அப்​போது, குழந்​தையை கீழே போட்ட நாய், குழந்​தை​யின் தலை, கை, கால், காது உள்​ளிட்ட பகு​தி​களில் கடித்​தது.

மேலும், தடுக்​கச் சென்ற மல்​லிகாபீவியை​யும் கடித்து காயப்​படுத்​தி​யது. பின்​னர், அரு​கில் இருந்​தவர்​கள் ஓடிச் சென்று நாயை விரட்​டி​விட்​டு, மல்​லிகா பீவி மற்​றும் குழந்​தையை மீட்​டு, கூத்​தாநல்​லூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். பின்​னர் இரு​வரும் மேல் சிகிச்​சைக்​காக திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் அப்​பகுதியில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X