2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாடுகளிலுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இலங்கைக்கு நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளதாக, வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் பேராசிரியர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை (11) பிலிப்பனைஸ்-மெனிலா நகலிருந்தும், 13 ஆம் திகதி மாலைத்தீவின்- மாலி நகரிலிருந்தும், எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான்- லாகூர் நகரிலிருந்தும் இலங்கையர்கள் அழைத்துவரப்படவுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும்,  இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானங்கள் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X