2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு தொழில் வங்குமாறு வலியுறுத்தி இன்று (05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அநுராதபுர பிரதேச சபை கட்டடத் தொகுதி முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு,  பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டபோது, ஒரு பகுதியினருக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்பட்டபோதிலும், குறித்த தேர்வில் பங்கேற்ற தமக்கு இதுவரை  எவ்வித நியமனங்களும் வழங்கப்படவில்லையென, வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துதனர்.

இவ்வாறிருக்க, மீண்டும் நேர்முகத் தேர்வொன்றை நடத்தி, ஆசிரியர் சேவையில் வேறு சிலரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தம்மை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .