Freelancer / 2021 நவம்பர் 08 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம், பல விழாக்கள், விருந்துபசாரகள் மற்றும் திருமண வைபவங்களிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் இவ்வாறு நாளுக்கு நாள் பொறுப்பற்ற முறையின் கீழ், செயற்படுவார்களாயின் பொது வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்றுமுன்தினம் 617ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் (06) அதிகரித்துள்ளது. அன்றையதினம் 20 பேர் மரணித்துள்ளனர். அதில், 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago