2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விமானப்படைக்கு 8 போர் விமானங்கள் புதிதாக வருகிறன

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

விமானப் படையினரின் பயன்பாட்டுக்காக ஜெட்ரக  யுத்த விமானங்கள் 8 மற்றும் அதற்கு தேவையான ஆயுதங்களை கொள்ளவனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

'தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்தும் நோக்கில் ஓர் அராசாங்கத்திடம் இருந்து மற்றுமொரு அரசாங்கம்  பொருள் கொள்வனவு செய்யும் அடிப்படையில் போர் விமானங்களை வழங்க ஆர்வம் கொண்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்தார். அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, யுத்த விமானங்கள் பல பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அதன் காரணமாக புதிய போர் விமானங்களை கொள்வனவு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து கொள்வனவு செய்வீர்களா? என்று ஊடகவிலாளர் கேட்டதுக்கு' அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது குறித்த விமானங்களை கொள்வனவு செய்ய ஏனைய நாடுகளுக்கு கேள்விப் பத்திரம் அனுப்பபட்டு அவை பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே கொள்வனவு செய்யப்படும்' என்றார்.

அத்துடன் பழுதடைந்துள்ள விமானங்களை திருத்தி விற்றுவிட முடியும் என்று அமைச்சர் கூற, 'திருத்த முடியுமென்றால் புதிதாக ஏன் கொள்வனவு செய்கின்றீர்கள்?' என்று ஊடகவியலாளர் கேட்டதுக்கு. அமைச்சர் சிரிப்பை பதிலாக அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .