Editorial / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றவாளியான ஹீனட்டியே மகேஷின் அறிவுறுத்தலுடன் துபாய்க்கு தப்பிச் செல்லவிருந்த ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொடையைச் சேர்ந்த 32 வயதுடையவர். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஐஸ் மற்றும் 260 மில்லிகிராம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாடு முழுவதும் போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுடன் இணைந்து, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, துணை காவல் துறை ஆய்வாளர் சமந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு அதிரடிப்படை மினுவாங்கொடை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, சந்தேக நபரைக் கைது செய்தது.
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
1 hours ago