2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஹர்ஜானாக மாறிய அர்ஜுன மஹேந்திரன்

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், தனது பெயரை “ஹர்ஜான் அலெக்ஸாண்டர்” என மாற்றியுள்ளாரென, சர்வதேச பொலிஸார் அறிக்கையி்ட்டுள்ளதாக, சட்டமா அதிபர், கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (16) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமால் எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்பத்திலேயே, அர்ஜுன மஹேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான சர்வதேச பொலிஸாரின் அறிக்கைக் குறித்து, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிஸிட்டர் நாயகம் பாரிந்த ரணசிங்க நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X