Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (01) பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஹேஷா விதானகேவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று (30) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மோசடி வழக்கொன்றில் நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றில் இன்று முன்னிலையான நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
7 minute ago
11 minute ago
20 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
20 minute ago
13 Mar 2026