2025 ஜூலை 05, சனிக்கிழமை

10 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் வான் வீதியில், இளைஞன் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர், புத்தளம் பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த, 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேகநபர் கடந்த 2008 ஆம் ஆண்டு, புத்தளம் வான் வீதியில் தனது நண்பர்களுடன் இணைந்து, 21 வயதுடைய இளைஞனை  துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூர், சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சென்று தலைமறைவாகி இருந்துள்ளாரென, புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில், சந்தேகநபர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, அளுத்கம- தர்கா நகர் ஆகிய பகுதியில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பத்து வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்று (06) புத்தளம் நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞனை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை புத்தளம் வான் குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளதாக ௯றியுள்ளார்.

சந்தேக நபர் வழங்கி வாக்குமூலத்தின் அடிப்படையில், துப்பாக்கியை தேடும் நோக்கில் சந்தேக நபரை இன்று (07) காலை புத்தளம் வான் குளத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், கடற்படையினரின் சுழியோடி குழுவினரினரால், துப்பாக்கியை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புத்தளம் வான் குளம் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .