Freelancer / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெறவிருந்த, கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுனுகொலே அமிதானந்தா என்ற சந்தேக நபரை, ஏழு நாட்களுக்கு (மே 02 வரை) தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர நேற்று 27 ஆம் திகதி உத்தரவிட்டார்.
போதைப்பொருட்களைக் கொண்டு வந்த இளம் துறவிகள் கைது செய்யப்பட்டபோது, பிக்கு அமிதானந்தா போதைப் பொருட்களை பெறுவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார் என்று கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவி ஆய்வாளர் ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
துறவிகள் கைது செய்யப்பட்ட பின்னர், கலவரமடைந்த பிக்கு அமிதானந்தா, விமான நிலையத்திலிருந்து தப்பி மிரிஸ்வத்தை பகுதியில் பதுங்கினார். பல புலனாய்வுக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அவரைக் கைது செய்தன.
விசாரணையின் போது, சந்தேக நபர் இதற்கு முன்பும் நாட்டிற்கு போதைப்பொருட்களைக் கடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது.
பிக்கு அமிதானந்தாவின் மருத்துவப் பதிவுகள் சாதகமாக இருப்பதாகவும், அவர் அந்த நேரத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாய்லாந்து பயணத்திற்காக இளம் துறவிகளைச் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவை துறவி அமிதானந்தாவே நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், பிரிவு 54 -இன் கீழ் ஒரு வார கால விசாரணைக்காக அவரைத் தடுத்து வைக்க அனுமதி கோரப்பட்டது.
41 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
41 minute ago
1 hours ago