Editorial / 2025 மே 18 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது, இன்றைய தினம் (மே.18) மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் 16ஆம் ஆண்டு பூர்த்தியடைந்துள்ளது.
முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து காலை 10:31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றி வைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க, சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.









1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026