2026 மார்ச் 11, புதன்கிழமை

விஜய்யின் பெயரைத் தவிர்த்த மகன்? வைரலாகும் ’S’ ரகசியம்

Editorial   / 2026 மார்ச் 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் பயன்படுத்தும் 'கையொப்பம்' (Signature) தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 சினிமா வாரிசுகள் பொதுவாகத் தங்கள் தந்தையின் பெயரையே அடையாளமாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்கான ஒப்பந்தங்கள் மற்றும் டைட்டில் கார்டுகளில் தந்தையின் பெயரைக் குறிக்கும் இனிஷியலைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பதிலாக அவர் "Jason Sanjay S" என்றே கையொப்பமிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உள்ள 'S' என்பது அவரது தாயார் சங்கீதாவின் (Sangeetha) பெயரைக் குறிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், சஞ்சய்யின் இந்த முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யின் பிள்ளைகள் இருவரும் தாயின் பக்கமே நிற்கிறார்களா? தந்தையுடனான இடைவெளிதான் இந்தப் பெயர் மாற்றத்திற்குக் காரணமா? என ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

மறுபுறம், ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் புகழையோ அல்லது அரசியல் செல்வாக்கையோ பயன்படுத்தாமல், தனது திறமையால் தனிப்பாதையை உருவாக்க விரும்புவதாலேயே இவ்வாறு செய்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

லண்டனில் சினிமா படிப்பை முடித்த அவர், சென்னை திரும்பிய பின்பும் பெரும்பாலும் தனித்தே இயங்கி வருகிறார். தந்தையின் சிபாரிசு இன்றி, முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா (Lyca Productions) மூலம் தனது முதல் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

தந்தை தமிழ் சினிமாவின் 'தளபதி'யாக இருக்கும் வேளையில், மகன் இயக்குநராகத் தனது முதல் அடியை எடுத்து வைப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இந்த 'பெயர் சர்ச்சை' அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்த விவாதங்களையும் மீண்டும் சூடாக்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .