Princiya Dixci / 2015 ஜூலை 28 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு அருகில் வைத்து பேசியதாக கூறப்படும் சம்பவம் மற்றும் ஜாதிக பல சேனா, கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சம்பவங்களிலும் பிரதிவாதியாக குறிப்பிட்டு ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago