2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூவருக்கு அழைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகிய மூவரும் விசேட ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை (16) சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் ரொஸ்மட் சேனாரத்னவை அந்த பதவியிலிருந்து 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதியன்று எவ்விதமான காரணங்களும் இன்றி நீக்கியதுடன் அந்தப்பதவிக்கு கைத்தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் அநுர சிறிவர்தனவை நியமித்தமை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களை இலவசமாக ஒலி,ஒளிபரப்பியதன் ஊடாக 115 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை ஆகிய இரு சம்பவங்கள் தொடர்பில் இந்த மூவரிடமும் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அழைக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X