2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

38 பேர் வந்தனர்; 415 பேர் வருவார்கள்

J.A. George   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் தங்கியிருந்த 38 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் கட்டாரில் இருந்து நாடு திரும்பியதாக கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்  தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 415 இலங்கையர்கள் இன்று(31) நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓமானில் இருந்து 30 பேர், மாலைத்தீவில் இருந்து 06 பேர், இத்தாலியில் இருந்து 22 பேர், பாகிஸடதானில் இருந்து 05 பேர், ருவண்டாவில் இருந்து 06, இந்தியாவில் இருந்து 290 பேர், ஜேர்மனில் இருந்து 06 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 50 பேர் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தற்போது 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5588 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .