2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

621 கிலோ கிராம் பீடி இலைகள் சிக்கின

Editorial   / 2026 ஜனவரி 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 621கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஒரு கப்பலால் நீர் கொழும்பு கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பரப்பில் கைவிடப்பட்ட 16 பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. 

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X