2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நாட்டு நலன் கருதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என்போரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும் என கிண்ணியா, கிழக்குவள அபிவிருத்தி மையம் தெரிவித்துள்ளது.

அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவின் அமர்வு செவ்வாய்க்கிழமை(23) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கிண்ணியா, கிழக்குவள அபிவிருத்தி மையத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றம், சட்டத்தை ஆக்குகின்ற மன்றமாக இருப்பதால் அதற்கேற்ப செயற்படக் கூடிய சிறந்த உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.

எனவே, எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோரின்; கல்வித்தகைமை வரையறை செய்யப்பட வேண்டும்.

சிங்களம், தமிழ் ஆகியன அரசகரும மொழிகளாகவும், நிருவாக மொழிகளாகவும் இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.

அரச நியமனம் பெறுவதற்கு இரண்டாம் மொழி சித்தி அவசியம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'சட்ட மா அதிபர் திணைக்களப் பணிகள் பரவலாக்கப்பட வேண்டும். பிராந்திய மட்டங்களில் சட்டமா அதிபர் பிராந்திய அலுவலகங்கள் செயற்பட வகை செய்யப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் அமர்வுகள் சுற்றுலா அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் விரிவு படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சபையின் சுயாதீன செயற்பாட்டுக்குத் தேவையான அதிகாரங்களை அதிகரித்தல் வேண்டும்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கூட்டுத்தாபனப் பணிப்பாளர்கள், சபைகளின் தலைவர்கள் போன்ற உயர் பதவிகள் இந்தச் சபையின் சிபாரிசுக்கமைய வழங்கப்பட வேண்டும்.
கொள்கை வகுப்புக்கென தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.

எந்தச் சமூகத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தொகுதி மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.தொகுதிவாரி, விகிதாசாரம் என்ற கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதில் 50:50 என்ற அடிப்படையில் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.

மாகாணத்தில் சமூக ரீதியான அநீதிகள், புறக்கணிப்புகள் இடம்பெறும் போது ஆளுநர் தலையீடு செய்யும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .