2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆட்டுத் திருடன் அகப்பட்டான்

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்           

திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் இரண்டு ஆடுகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரை நேற்று புதன்கிழமை (06) சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த  22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய இரண்டு ஆடுகளும் திருடு போய்விட்டதாக, செவ்வாய்க்கிழமை (05) சேருநுவர  பொலிஸ் நிலையத்தில், ஆட்டின் உரிமையாளர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரிடமிருந்து 3 ஆடுகளை மீட்டதாகவும் அவரிடமிருந்த மேலதிக ஒரு ஆடு திருடப்பட்டதா அல்லது  அவருக்குச் சொந்தமானதாக என்பது தொடர்புடைய விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .