Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள சகலமக்களுடனும் இந்தியா எப்போதும் துணைநிற்பதாக குறிப்பிட்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பாக்லே, இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டிருந்த அவர், திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசித்ததுடன் ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் நகரமண்டபத்திலே இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு 200 பேருக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் எம்.பியான த.கலையரசனுடன் கலந்துரையாடிய உயர் ஸ்தானிகர் நல்வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்றபோது. அங்கு பாரம்பரிய ரீதியில் தனக்கு வரவேற்பளித்த சிறுமிகளுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.
அத்துடன், அண்மைய காலப்பகுதியில் நடைபெற்ற அகழ்வுப்பணிகளின்போது மீட்கப்பட்டதும் சோழர்காலத்துக்குரியதெனக் கூறப்படுவதுமான நந்தி சிலையினையும் இங்கு காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
31 minute ago
45 minute ago