2025 ஜூன் 07, சனிக்கிழமை

உண்டியலை திருடிய சிறுவன் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எப்.முபாரக்                  

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில், உண்டியலைத் திருடிய 15 வயது  சிறுவனை  எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.       

மூதூர், பாலநகர் பகுதியைச் சேர்ந்த பசிறுவனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.       

குறித்த சிறுவன், அயல் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த உண்டியலை  திருடியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.     

கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .