Freelancer / 2022 ஜூன் 22 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில், சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சீனன்வெளி மற்றும் உப்பூறல் கிராமங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில், ரூபா.2,50000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனை திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் அனாஸ், வெருகல் பிரதேச சபைத் தலைவர் விஜயரகுவரன், முன்னாள் தலைவர் திரு சுந்தரலிங்கம் கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கப் பேராளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

41 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
59 minute ago
2 hours ago