2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலா­ளர்­க­ளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் திறன்­களை விருத்தி செய்யும் வகையில் வெகு­சன ஊடக அமைச்­சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தெசி ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்­டத்தில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஊடகவியலா­ளர்­க­ளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நாளை வெள்ளிக்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ள கேட்போர் கூடத்தில் நாடாளுமன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் வெகு­சன ஊடக அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தலை­மையில் காலை 10 மணிக்கு நடை­பெ­ற­வுள்ளது.

இந்­நி­கழ்­வில், ஊட­கத்­துறை பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்­ளனர்.

முன்­னேற்­ற­க­ர­மான வெகு­சன ஊடக கலா­சா­ரத்தை உரு­வாக்கும் நோக்­குடன் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் அறிவு, தொழில்நுட்பம், மனப்­பாங்கு போன்ற அறிவுத்துறை விருத்­திக்­கென அங்கீக­ரிக்­கப்­பட்ட கல்வி நிறு­வ­னங்கள் பல்கலைக்கழகங்கள் போன்­ற­வற்றில் கற்கை நெறி­களை மேற்­கொள்ளும் பொருட்டு ஊடக அமைச்­சினால் இப்புலமைப்பரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் விண்­ணப்­பித்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் நடத்­தப்­பட்ட மேற்­படி புலமைப்பரிசிலுக்­கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஊடகவியலாளர்களுக்கு நாளை புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .