Gavitha / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 11ஆம் திகதி, திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
புதன்கிழமை காலை 9.30 மணியளவில், உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மைய வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னனெடுக்கப்படவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
'வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும், களப்பு நீதி மன்றம் உருவாக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படல் வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும்' போன்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடந்தேரிய சித்திரவதை படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறி முறை உருவாக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சட்ட உதவி மையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago