2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கசிப்புடன் மூவர் கைது

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன்  கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த  மூவரை நேற்று (04) கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே. சவாஹிர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தோப்பூர், சின்னக் குளம், பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்த ரவீந்திரன்  குமார் என்பவரிடம் இருந்து 1,500 மில்லி லீற்றரும் தோப்பூர் நல்லூரைச் சேர்ந்த இராமலிங்கம் கணேசன் என்பவரிடம் இருந்து 750 மில்லி லீற்றரும் தோப்பூர் இந்திக்குளம், பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த குமார் யோகராஜா என்பவரி;டம் இருந்து 1,500 மில்லி லீற்றரும் கைப்பட்டப்பட்டுள்ளது.

இவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பூர் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையை முழுமையாக ஒழித்து போதைப் பொருள் அற்ற சமூகம் ஒன்றை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ், நேற்று சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8