2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட 15 பேருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட சம்பூர், பள்ளிக்குடியிருப்பு, சேனையூர், தங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 15 பேரில் 09 பேருக்கு தலா 7,500 ரூபாய் படியும் 06 பேருக்கு தலா 10,000 ரூபாய் படியும் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான், இன்று வியாழக்கிழமை அபராதம் விதித்துள்ளார்.

மேற்படி பகுதிகளில் கசிப்புத் தயாரிப்பு இடம்பெறுவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிகளில்; மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கசிப்புப் போத்தல்கள், கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கோடா மற்றும்  அதற்கான உபகரணங்களுடன் இந்தப் 15 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .