Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - லிங்கநகர் பகுதியில், கணவனின் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரி (55 வயது) எனும் பெண் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் (19) இரவு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தர்.
இப்பெண், கணவனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், இம்மாதம் 16ஆம் திகதி 11:52 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
19 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
54 minute ago