அப்துல்சலாம் யாசீம் / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக் கிளையால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மொரவெவ, கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களைத் தெரிவுசெய்து, கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் போல் ரொஷான் தலைமையில், இன்று (05) நடைபெற்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago