அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் கலாசார மண்டபமொன்றை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்காமம், கிளிவெட்டி தொடக்கம் நல்லூர், உப்பூரல் வரை தமிழ், முஸ்லிம் மக்கள் இன நற்புணர்வுடன் வாழும் தோப்பூர் பிரதேசத்தில் இதுவரை காலமும் கலாசார மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 15 கிராமங்களைக் கொண்ட தோப்பூர் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கலாசார மண்டபமொன்றை அமைத்து தருவதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
22 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
2 hours ago