2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

எப். முபாரக்   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை,  கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம், நேற்று  (15) மீட்கப்பட்டுள்ளதென, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கன்னியா பீலியடி இலக்கம் 10 இல் வசித்து வந்த காலிமுத்து தர்சிக்கா (18 வயது) என்ற யுவதியெனத் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி, உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும் கிணற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளாரெனவும் உறவினர்கள், பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X