Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், சகா
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக எம்.கிறிஸ்டிலால் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் நேற்று (05) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை உடைய இவர், இதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியவராவார்.
முன்னதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஐ.கே.ஜி.முத்துபண்டா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையை அடுத்து, இவர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
30 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
47 minute ago
1 hours ago