2025 மே 23, வெள்ளிக்கிழமை

கைகலப்பில் மூவர் காயம்; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர்ப் பகுதியில் சனிக்கிழமை (02) இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது, படுகாயமடைந்த மூன்று பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணி சம்பந்தமாகவே இந்தக் கைலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து  தடுப்புக்காவலில் வைத்திருப்பதுடன், இவர்களை நாளை திங்கட்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X