2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கைக்குண்டை மறைத்து வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மே 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில்  கைக்குண்டு ஒன்றை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

முச்சக்கரவண்டியில் கைக்குண்டை மறைத்துi வைத்திருப்பதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு முச்சக்கரவண்டியிலிருந்து இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .