2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹரி

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி, தங்கபுரம் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் நேற்று(28) இரவு உட்புகுந்து தங்க நகைகள்,பணம் போன்றவற்றை திருடிய  18 மற்றும் 20 ஆகிய வயது இளைஞர்கள் இருவரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோதே, இவ்விரு இளைஞர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் நாளை புதன்கிழமை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .