2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எம்.முபாரக்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கங்கை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 7 உழவு இயந்திரங்களையும் ஏழு நபர்களையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சேறுவில- எல் பீ 2 பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (11) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X