2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சம்பூருக்கு அமெரிக்க அதிகாரிகள் விஜயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், சமோத்யா நோத்திராஞ்சலி அமரஜீவ

அமெரிக்க ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும்; தொழில் பணியக அதிகாரிகளின் பிரதானி ரோஸ் ஜக்சன் மற்றும் அதன் உதவிச் செயலாளர் டொம் மலினோஸ்கி உள்ளிட்டோர் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்துக்கு சனிக்கிழமை (29) விஜயம் செய்தனர்.

இவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

சம்பூர் பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள மக்களை சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர். இதன்போது, அம்மக்களின் நிலைமை தொடர்பிலும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .