2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சீரற்ற வானிலையால் மீனவர்கள் பாதிப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில், தற்போது தொடர்ச்சியாகக் காணப்படும் சீரற்ற வானிலை காரணமாக, திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில், திருகோணமலை, கிண்ணியா, மூதூர் பிரதேச மீனவர்களே,  இவ்வாறான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

எனவே, இவ்வாறான சந்தர்ப்பத்தில், மீனவர்களுக்கு அரசாங்கம் மானிய மூலம் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X