Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருணகிரி, வில்லூண்டி, மனையாவெளி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நேற்று (26) நடைபெற்றது.
துறைமுக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமதிலக்க வீரசிங்க, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாகவும் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.கொடிதுவக்கு கொளரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா 13 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago