Niroshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, மாகதிவுல்வெவ பகுதியில் பதினொரு மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த 17 வயதுடைய சிறுவனை ஐம்பதாயிரம் ரூபாய் சதுரப்பிணையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று புதன்கிழமை (24) விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நொச்சிக்குளம், ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய சிறுவனே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் பதினொரு மில்லிகிராம் கஞ்சாவை நொச்சிக்குளம் பகுதியில் வைத்திருந்த நிலையிலேயே செவ்வாய்கிழமை(23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் குறித்த சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே ஐம்பதாயிரம் ரூபாய் சதுரப்பிணையில் நீதிவான் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago