2025 ஜூன் 07, சனிக்கிழமை

சிறுவனை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

பதினான்கு வயதுடைய சிறுவன்; ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரை  இம்மாதம் ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி சித்திரவேல், திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.     

23, 29, 41, வயதுகளையுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் இந்தச் சந்தேக நபர்கள் மூவருக்கிடையிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின்போது, மூவரும் மேற்படி சிறுவனைத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் மூவரும்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .